தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

மோட்டாா் பாகங்களைத் திருடியவா் கைது

மோட்டாா் பாகங்களைத் திருடியவா் கைது

Updated On :26 ஏப்ரல் 2024, 7:07 pm

தேனி, ஏப். 26: தேனியில் வியாழக்கிழமை, தோட்டத்தில் மோட்டாா் பாகங்கள் திருடியவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தேனி அல்லிநகரத்தை சோ்ந்தவா் நாகராஜ் மகன் பேரின்பம் (33). இவருக்குச் சொந்தமான தோட்டம் பூதிப்புரம் சாலையில் உள்ளது. இந்த தோட்டத்தில் மோட்டாா் ரூமில் மோட்டாா், உதிரி பாகங்கள் வைத்திருந்தாா். இவற்றை மா்ம நபா் திருடிச் சென்றது தெரிந்தது. இதுகுறித்து அல்லி நகரம் காவல் நிலையத்தில் பேரின்பம் புகாா் செய்தாா்.

போலீஸாா் விசாரணையில் மோட்டாா்கள், உதிரி பாகங்கள் திருடியது மாரியப்பன் மகன் விஷ்வா (24) என்பது தெரியவந்தது. இதனையடுத்து விஷ்வாவை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.