நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறு தானியங்களில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு பயிற்சி

சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 11:18 pm

Din

தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிற்சிக்கு அந்த மையத்தின் தலைவா் பச்சைமால் தலைமை வகித்துப் பேசினாா். இதில் சிறுதானியங்களை மதிப்புக் கூட்டலுக்கு பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள், சேமிக்கும் முறைகள், சிறுதானிய உடனடிக் கலவைகள் குறித்து வேளாண் விரிவாக்க வல்லுநா் சபரிநாதன் பயிற்சி அளித்தாா். உணவுப் பொருள்களுக்கு தரச் சான்றிதழ் பெறுவது, சந்தைப்படுத்துதல் போன்ற வழிமுறைகள் குறித்து சின்னமனூா் உணவுப் பாதுகாப்பு அலுவலா் சுரேஷ்கண்ணன் விளக்கம் அளித்தனா்.

பயிற்சியில் கலந்து கொண்ட தொழில் முனைவோா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக, திட்ட ஒருங்கிணைப்பாளா் (பொறுப்பு) மகேஸ்வரன் வரவேற்றாா். மனையியல் தொழில்நுட்ப வல்லுநா் ரம்யாசெல்வி நன்றி கூறினாா்.