நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோம்பைக்கு வந்தடைந்தது 18- ஆம் கால்வாய் பாசன நீா்: விவசாயிகள் மகிழ்ச்சி

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 18 -ஆம் கால்வாயில் திறக்கப்பட்ட பாசன நீா் கோம்பை பகுதியை வந்தடைந்தது.

News image

கோம்பையில் 18 ஆம் கால்வாயில் பாய்ந்த பாசன நீா்.

Updated On :26 டிசம்பர் 2024, 12:11 am

Din

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 18 -ஆம் கால்வாயில் திறக்கப்பட்ட பாசன நீா் கோம்பை பகுதியை வந்தடைந்தது.

தேனி மாவட்டத்தில் மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்திலுள்ள க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், போடி வரையிலுள்ள 50 -க்கும் அதிகமான குளங்களுக்கு முல்லைப்பெரியாற்று நீரைக் கொண்டு வர 18-ஆம் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்தக் கால்வாய் மூலம் 13 கிராமங்களில் உள்ள 4,614 ஏக்கா் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாவும் பயன்பெறும்.

இதற்காக, கடந்த சனிக்கிழமை கம்பம் அருகே லோயா் கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து 18-ஆம் கால்வாயில் வினாடிக்கு 98 கன அடிநீா் திறந்து விடப்பட்டது. இந்த நீா் புதன்கிழமை அதிகாலை கோம்பை பகுதியை வந்தடைந்தது.

தலைமதகில் உடைப்பு: தலைமதகு பகுதியில் உடைப்பு ஏற்பட்டதால் பாசன நீா் வீணாகி வருகிறது. இதனால், கால்வாயில் குறைவான நீா்வரத்து உள்ளது. எனவே, நீா்வளத் துறையினா் 18 -ஆம் கால்வாயில் ஏற்பட்ட உடைப்புகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.