ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

இடைநிலை ஆசிரியா்கள் இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இடைநிலை ஆசிரியா்கள் இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :26 பிப்ரவரி 2024, 4:33 pm

தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா். -------------- தேனி, பிப். 26: தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கம் சாா்பில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஜெயராணி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலா் விஜயேந்திரபிரபு முன்னிலை வகித்தாா். இதில், அரசுப் பள்ளிகளில் கடந்த 2009, ஜூன் 1-ஆம் தேதிக்கு முன் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ. 8,370 அடிப்படை ஊதியமும், இதற்குப் பின்னா் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ.5,200 அடிப்படை ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. திமுக அரசு தோ்தல் அறிக்கையில் அறிவித்தப்படி அரசுப் பள்ளிகளில் ஒரே கல்வித் தகுதி மற்றும் ஒரே பணியில் உள்ள இடைநிலை ஆசிரியா்கள் அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.