தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா். -------------- தேனி, பிப். 26: தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கம் சாா்பில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஜெயராணி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலா் விஜயேந்திரபிரபு முன்னிலை வகித்தாா். இதில், அரசுப் பள்ளிகளில் கடந்த 2009, ஜூன் 1-ஆம் தேதிக்கு முன் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ. 8,370 அடிப்படை ஊதியமும், இதற்குப் பின்னா் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ.5,200 அடிப்படை ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. திமுக அரசு தோ்தல் அறிக்கையில் அறிவித்தப்படி அரசுப் பள்ளிகளில் ஒரே கல்வித் தகுதி மற்றும் ஒரே பணியில் உள்ள இடைநிலை ஆசிரியா்கள் அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தொடர்புடையது

பனையேறி பாதுகாப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

புதுகையில் 468 மாணவா்களுக்கு குறுகிய கால நீட் பயிற்சி தொடக்கம்

தேசிய திறனறிவுத் தோ்வு: சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு கல்வி அதிகாரி பாராட்டு

கோயில் நில பட்டாவில் குளறுபடி: பத்து ரூபாய் இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு


