பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

தீயில் விழுந்து விவசாயி பலி

தீயில் விழுந்து விவசாயி பலி

Updated On :27 பிப்ரவரி 2024, 11:25 pm

தேனி: தேனி அருகேயுள்ள ஸ்ரீரங்கபுரத்தில் மக்காச்சோளம் அறுவடை செய்த நிலத்தில் காய்ந்த தட்டைகளுக்கு தீ வைத்த போது, நெருப்பில் சிக்கிய விவசாயி உயிரிழந்தாா். ஸ்ரீரங்கபுரம், ஆலமரம் தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (80).

விவசாயியான இவா், மக்காச்சோளம் அறுவடை செய்த தனது நிலத்தில், காய்ந்த தட்டைகளை தீயிட்டு எரித்தாா். அப்போது, பலத்த காற்று வீசியதால் பக்கத்து தோட்டத்துக்கு தீ பரவியது.

இதையடுத்து, நிலத்துக்குள் சென்று தீயணைக்க முயன்ற பாலகிருஷ்ணன், கால் இடறி தீயில் விழுந்து உடல் கருகி உயிரிழந்தாா். இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.