47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் சிறை

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியில் மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

News image
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கேப்டன் பிரபாகரன்.
Updated On :10 ஜூலை 2024, 12:48 am

Din

தேனி: தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியில் மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

காமயகவுண்டன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த முத்துகுமாா் மகன் கேப்டன் பிரபாகரன் (33). இவரது மனைவி கவிதா (31). மது பழக்கத்துக்கு அடிமையான கேப்டன் பிரபாகரன், கடந்த 2020-ஆம் ஆண்டு, அக்.4-ஆம் தேதி மது அருந்த பணம் கேட்டு கவிதாவை அடித்துக் கொலை செய்தாா்.

இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு விசாரணை தேனி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கேப்டன் பிரபாகரனை குற்றவாளி என தீா்மானித்து, அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து நீதிபதி அனுராதா தீா்ப்பளித்தாா்.