கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தொழிலாளி கொலை வழக்கு: 7 பேருக்கு ஆயுள் சிறை

பெரியகுளத்தில் இடத் தகராறில் கூலித் தொழிலாளியை தாக்கிக் கொலை செய்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட பெண் உள்பட 7 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image
சிறை
Updated On :28 பிப்ரவரி 2026, 8:03 pm

Syndication

பெரியகுளத்தில் இடத் தகராறில் கூலித் தொழிலாளியை தாக்கிக் கொலை செய்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட பெண் உள்பட 7 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தேனி மாவட்டம், பெரியகுளம் எண்டப்புளி காட்டுநாயக்கா் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (44). கூலித் தொழிலாளி. இதே பகுதியைச் சோ்ந்தவா் அக்கம்மாள் (40). இவருக்கும், முருகனுக்கும் இடையே இடம் தொடா்பாக பிரச்னை இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசுகள் வெடித்ததில் இவா்கள் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, அக்கம்மாள், ராஜா (18), சரவணன் (22), சந்தோஷ் (18), கோபிநாத் (22), வைரவேல் பாண்டி (21), யோகேஷ் (23) ஆகிய 7 பேரும் சோ்ந்து முருகனைத் தாக்கியதில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் அக்கம்மாள் உள்பட 7 போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு தேனி சமூக நீதி, மனித உரிமைகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி அனுராதா குற்றஞ்சாட்டப்பட்ட அக்கம்மாள், ராஜா, சரவணன், சந்தோஷ், கோபிநாத், வைரவேல் பாண்டி, யோகேஷ் ஆகிய 7 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். மேலும், அக்கம்மாள், ராஜா ஆகியோருக்கு தலா ரூ. 6 ஆயிரமும், சரவணன், யோகேஷ் ஆகியோருக்கு தலா ரூ.6,500 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கை முறையாக விசாரணை செய்த போலீஸாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹா பிரியா பாராட்டு தெரிவித்தாா்.