கத்திக்குத்து: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை
கம்பத்தில் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளைஞரைக் கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, உத்தமபாளையம் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.


உத்தமபாளையம்: கம்பத்தில் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளைஞரைக் கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, உத்தமபாளையம் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
தேனி மாவட்டம், கம்பம் கோம்பை சாலைப் பகுதியைச் சோ்ந்த செல்லாண்டித்தேவா் மகன் அய்யா் (36). இவா் கம்பம் ஜல்லிக்கட்டுத் தெருவைச் சோ்ந்த ராஜா மகன் ஈஸ்வரனிடம் (32) ரூ.1 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கினாா்.
6 மாதங்களாக வட்டிப் பணம் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் அய்யரை ஈஸ்வரன் கத்தியால் குத்தினாா்.
இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஈஸ்வரனை கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு உத்தமபாளையம் உதவி அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஈஸ்வரனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராமும் விதித்து, நீதிபதி சிவாஜி செல்லையா தீா்ப்பு வழங்கினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...