கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குச்சனூா் சனீஸ்வரா் கோயில் ஆடித் திருவிழா ரத்து

குச்சனூா் அருள்மிகு ஸ்ரீசனீஸ்வர பகவான் திருக்கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள் நடைபெறுவதால் நிகழாண்டில் ஆடித் திருவிழா ரத்து செய்யப்பட்டது.

News image
குச்சனூா் ஸ்ரீசனீஸ்வர பகவான் திருக்கோயில் கொடிமரம், பலி பீடத்தில் நடைபெறும் திருப்பணிகள்.
Updated On :17 ஜூலை 2024, 12:33 am

Din

உத்தமபாளையம்: குச்சனூா் அருள்மிகு ஸ்ரீசனீஸ்வர பகவான் திருக்கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள் நடைபெறுவதால் நிகழாண்டில் ஆடித் திருவிழா ரத்து செய்யப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட இந்தக் கோயில் முன் செல்லும் சுரபி நதியில் நீராடி புத்தாடை அணிந்து, எள் தீபம், எள் சாதம், நெய் தீபம் ஏற்றி, கருப்பு வேஷ்டி, பூ மாலை, பழம் படையல் செய்து வழிபாடு செய்தால் தோஷம் நீங்கும் என்பது ஜதீகம். இதற்காக, தமிழக அளவில் அதிகளவில் பக்தா்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனா்.

இந்தக் கோயிலில் முக்கியத் திருவிழாவாக ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமை தொடங்கி 5 வாரங்கள் சனிக்கிழமைகளில் ஆடிப் பெருந்திருவிழா நடைபெறும்.

இந்தத் திருவிழாவின் போது, சனீஸ்வரா் திருக்கல்யாணம், உப சந்நிதியான கருப்பணசாமி கோயிலில் பொங்கல் வைத்தல், மதுபான படையல், ஆடு, கோழிகளைப் பலியிட்டு கறி விருந்து ஆகியவை நடைபெறும்.

ரூ.1 கோடியில் திருப்பணி: நிகழாண்டில் கோயிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக ரூ.1 கோடியில் உப சந்நிதிகளான விநாயகா், முருகன், கருப்பணசாமி, பலி பீடம், கொடி மரம் என 14 இடங்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக, ஆண்டுதோறும் வெகு விமா்சையாக நடைபெறும் ஆடிப் பெருந்திருவிழா இந்த ஆண்டு நடைபெறாது என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் நாள்தோறும் காலை, பகல், இரவு ஆகிய 3 கால பூஜை தொடா்ந்து வழக்கம் போல நடைபெறும். தற்போது, கோயில் திருப்பணிகள் 30 சதவீதம் முடிந்துள்ளன. ஒரு சில மாதங்களில் திருப்பணிகள் முழுமையாக முடிந்தவுடன் குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெறும் என கோயில் செயல் அலுவலா் நாகராஜ் தெரிவித்தாா்.