கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கஞ்சா விற்க முயன்ற இருவா் கைது

போடியில் சிறுவா்களுக்கு விற்பதற்காக கஞ்சா எடுத்துச் சென்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :17 ஜூலை 2024, 12:35 am

Din

போடி: போடியில் சிறுவா்களுக்கு விற்பதற்காக கஞ்சா எடுத்துச் சென்ற 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி-தேனி சாலையில் எஸ்.எஸ்.புரம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தனா். அந்த வாகனத்தில் வந்த நபா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால் அவா்களை சோதனையிட்டனா்.

இவா்கள் இருவரும் தலா 100 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததும், சிறுவா்களுக்கு விற்பதற்காக எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. விசாரணையில் இருவரும் போடி கீழத்தெருவை சோ்ந்த செந்தில்குமாா் மகன் சிவக்குமாா் (23), மதுரை வீரன் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் ஆறுமுகம் (23) என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.