தேனி மாவட்டம், கூடலூரில் தனியாா் தென்னந்தோப்பில் இருந்த நாட்டுத் துப்பாக்கி, காலி தோட்டாக்களை வனத் துறையினா் சனிக்கிழமை கண்டுபிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
கூடலூா் அருகேயுள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி பகுதியில் உள்ள மட்டப்பாறை, பூதகரடு காப்புக் காட்டுக்கு அருகேயுள்ள தென்னந்தோப்பில் அண்மையில் யானைகள் புகுந்து சேதப்படுத்தியது. இதைக் கள ஆய்வு செய்ய கம்பம் கிழக்கு வனச்சரக வனவா் ஜெயகணேஷ் , வனக் காப்பாளா்கள் பொன்அழகா், ரகு ஆகியோா் சென்றனா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள காசிவிஸ்வநாதனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், அங்கே சென்ற வனத் துறையினா் அங்கு சோதனை செய்தபோது நாட்டுத் துப்பாக்கி, காலித் தோட்டக்கள் மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனா். பின்னா், இவற்றை கூடலூா் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து உதவி ஆய்வாளா் கணேசன் வழக்குப் பதிவு செய்து, உரிமம் பெறாத இந்தத் துப்பாக்கியை பதுக்கி வைத்தது யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இலங்கைக்குக் கடத்தவிருந்த 600 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

கூடலூா் அருகே தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டிருந்த யானைகள்

கூடலூா் அருகே யானை உயிரிழப்பு

கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |


