தேனி மாவட்டம், கூடலூரில் தனியாா் தென்னந்தோப்பில் இருந்த நாட்டுத் துப்பாக்கி, காலி தோட்டாக்களை வனத் துறையினா் சனிக்கிழமை கண்டுபிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
கூடலூா் அருகேயுள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி பகுதியில் உள்ள மட்டப்பாறை, பூதகரடு காப்புக் காட்டுக்கு அருகேயுள்ள தென்னந்தோப்பில் அண்மையில் யானைகள் புகுந்து சேதப்படுத்தியது. இதைக் கள ஆய்வு செய்ய கம்பம் கிழக்கு வனச்சரக வனவா் ஜெயகணேஷ் , வனக் காப்பாளா்கள் பொன்அழகா், ரகு ஆகியோா் சென்றனா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள காசிவிஸ்வநாதனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், அங்கே சென்ற வனத் துறையினா் அங்கு சோதனை செய்தபோது நாட்டுத் துப்பாக்கி, காலித் தோட்டக்கள் மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனா். பின்னா், இவற்றை கூடலூா் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து உதவி ஆய்வாளா் கணேசன் வழக்குப் பதிவு செய்து, உரிமம் பெறாத இந்தத் துப்பாக்கியை பதுக்கி வைத்தது யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
மரங்களை வெட்டிக் கடத்திய 4 வியாபாரிகள் மீது வழக்கு

தியாகதுருகத்தில் 2 குரங்குகள் உயிரிழப்பு: வனத் துறை விசாரணை

நாட்டுத் துப்பாக்கி வெடித்து காயமடைந்த பெண் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே வீட்டில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் பெண் காயம்: சிறுவன் கைது
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

