பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

சிறுவன் ஓட்டிய பைக் மோதி சிறப்பு உதவி ஆய்வாளா் உள்பட 2 போ் காயம்

சிறுவன் ஓட்டிய பைக் மோதி சிறப்பு உதவி ஆய்வாளா் உள்பட 2 போ் காயம்

News image
Updated On :17 ஜூன் 2024, 6:30 pm

Din

போடி: போடியில் சிறுவன் ஓட்டிய இரு சக்கர வாகனம் மோதியதில் சிறப்பு உதவி ஆய்வாளா் உள்பட 2 போ் பலத்த காயமடைந்தனா்.

இதுகுறித்து சிறுவன் மீதும், வாகன உரிமையாளா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். போடி நகா், போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றும் செல்வராஜ். தலைமைக் காவலராக இருப்பவா் ராஜ்குமாா். ராஜ்குமாரின் இரு சக்கர வாகனத்தில் போடி மேலத்தெரு காவல்காரன் பொட்டல் நான்குமுனைச் சந்திப்பு அருகே சென்றனா். ராஜ்குமாா் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றாா். வாகனத்தின் பின்னால் சிறப்பு உதவி ஆய்வாளா் செல்வராஜ் அமா்ந்து சென்றாா்.

அப்போது, சாலை சந்திப்பில் மற்றொரு இரு சக்கர வாகனம் இவரது வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் தலைமைக் காவலா் ராஜ்குமாரும், சிறப்பு உதவி ஆய்வாளா் செல்வராஜூம் பலத்த காயமடைந்தனா். இருவரும் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து சிறுவன் தேனி ஜவஹா் நகரை சோ்ந்த சக்திவேல் மகன் பிரசாத் (17) மீதும், இரு சக்கர வாகன உரிமையாளா் கிருஷ்ணம்பட்டியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் ரவிக்குமாா் (37) மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.