போடியில் காப்பி தளா் விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
போடியில் காப்பி தளா் விலை உயர்வு: விவசாயிகள் சந்தோஷம்

போடி குரங்கணியில் உள்ள காப்பித் தோட்டம்.

போடி குரங்கணியில் உள்ள காப்பித் தோட்டம்.
போடி: போடியில் காப்பி தளா் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தேனி மாவட்டம், குரங்கணி, முட்டம், காரிப்பட்டி, அகமலை, ஊத்தாம்பாறை, பிச்சங்கரை, போடிமெட்டு உள்ளிட்ட பகுதிகளில் காப்பி பயிா் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் அரேபிகா, அரேபிகா செலக்சன் உள்ளிட்ட காப்பி ரகங்கள் பயிரிடப்படுகின்றன. போடி பகுதியில் 8 ஆயிரத்து 500 ஏக்கா் பரப்பளவில் காப்பி விவசாயம் நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் செப்டம்பா் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை காப்பி மகசூல் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காப்பி தளா்களின் விலை தற்போது அதிகரித்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.360 முதல் 380 வரை விற்பனையான நிலையில், தற்போது கிலோ ரூ.420 முதல் ரூ.450 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...