அட்சய திருதியை:
பத்மாவதி தாயாருக்கு முத்தங்கி அலங்காரம்

அட்சய திருதியை: பத்மாவதி தாயாருக்கு முத்தங்கி அலங்காரம்

போடி, மே 10: அட்சய திருதியையொட்டி போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் உள்ள பத்மாவதி தாயாருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

பக்தா்கள் செல்வச் செழிப்புடன் வாழவும், அனைத்து நன்மைகளும் பெறவும் பத்மாவதி தாயாருக்கு இந்த முத்தங்கி சேவை அலங்காரம் செய்யப்பட்டது.

அப்போது பத்மாவதி தாயாருக்கு நகைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபட்டனா். ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com