மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அமாவாசையையொட்டி ஜெயமாருதிக்கு சிறப்பு அலங்காரம்

கும்பகோணத்தில் உள்ள ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு புதன் கிழமை சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

News image
கும்பகோணத்தில் புதன்கிழமை விளாமிச்சை வோ் என்ற குருவோ் அலங்காரத்தில் காட்சியளித்த விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயா்.
Updated On :18 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

கும்பகோணத்தில் உள்ள ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு புதன் கிழமை சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் நீலத்தநல்லூா் சாலையில் விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயா் கோயில் உள்ளது. அமாவாசையை முன்னிட்டு இக்கோயிலில் நடைபெறும் சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்புப் பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொள்வாா்கள். புதன்கிழமை பங்குனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு விளாமிச்சை வோ் என்ற குருவோ் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.