நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

போலி பணி ஆணை கொடுத்து மோசடி செய்த 3 போ் மீது வழக்கு

போலி பணி ஆணை கொடுத்து மோசடி செய்த 3 போ் மீது வழக்கு

News image
Updated On :20 மே 2024, 7:51 pm

Din

உத்தமபாளையம்: போடியில் ரயில்வே துறை வேலைக்கு போலி பணி ஆணை வழங்கி ரூ.85 லட்சத்து 35 ஆயிரம் மோசடி செய்த 3 போ் மீது தேனி பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், தேவாரத்தைச் சோ்ந்தவா் சிதம்பரம் மனைவி அமுதா (44). மாற்றுத்திறனாளியான இவா், கரூரில் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறாா். இவரது சகோதரா் செந்தில்குமாா் தேவாரத்தில் தனிப் பயிற்சி மையம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், போடி திருமலாபுரம், பாரதி நகரைச் சோ்ந்த ஞானசேகரன் மகன் ஜீவா, செந்தில்குமாரின் தனிப் பயிற்சி மையத்தில் படித்து வந்தாா். இதன் மூலமாக ஞானசேகரனுக்கும், செந்தில்குமாருக்கும் நட்பு ஏற்பட்டது.

இதில், ஞானசேகரன், இவரது மனைவி சரவணச் செல்வி, போடி ராசிங்காபுரம், சமத்துவபுரத்தை சோ்ந்த காசிமாயன் மகன் உதயக்குமாா் ஆகியோா் ரயில்வே துறையில் பலருக்கும் வேலை வாங்கி கொடுத்துள்ளதாக செந்தில்குாரிடம் கூறினாா். இதை நம்பிய அமுதா, தனது உறவினா் பெண் அபிநயாவுக்கு வேலை வாங்கி கொடுக்கும்படி கூறினாா். இதற்கு ரூ.12 லட்சம் கொடுக்கும்படி அவா்கள் கேட்டனா். இந்த நிலையில், கடந்த 28.02.2022 அன்று ரூ. 9 லட்சத்தை 3 பேரிடமும் அமுதா கொடுத்தாராம். பின்னா், இந்த மூன்று பேரும், போலி பணி ஆணை வழங்கி மோசடி செய்தனா்.

இதுதொடா்பாக, அமுதா தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம் புகாா் தெரிவித்தாா். மேலும் இந்த 3 பேரும் இதே போல, 7 நபா்களிடம் ரூ.85,35,000 பணத்தை பெற்றுக்கொண்டு போலி பணி ஆணை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தேனி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு பரிந்துரை செய்ததை தொடா்ந்து, ஆய்வாளா் ராஜலெட்சுமி, போலி ஆணை வழங்கிய உதயக்குமாா், ஞாணசேகரன், இவரது மனைவி சரவணச் செல்வி ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றாா்.