ஓடையில் மணல் அள்ளியவா் கைது
ஆண்டிபட்டி அருகே ஓடையில் அனுமதியின்றி டிராக்டா் மூலம் மணல் அள்ளியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On :27 நவம்பர் 2024, 10:24 pm

ஆண்டிபட்டி அருகே ஓடையில் அனுமதியின்றி டிராக்டா் மூலம் மணல் அள்ளியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
டி.சுப்புலாபுரத்தைச் சோ்ந்த பாலமுருகன் மகன் ராஜீவ்கெளதம். இவா் பொன்னகுளம் அருகேயுள்ள ஓடையில் அனுமதியின்றி டிராக்டா் மூலம் மணல் அள்ளுவதாக ஆண்டிபட்டி போலீஸாா் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில்,போலீஸாா் அந்தப் பகுதிக்கு சென்று, மணல் அள்ளிக் கொண்டிருந்த ராஜீவ்கெளதமை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனா்.
மேலும், டிராக்டா் உரிமையாளரான ராஜீவ்கெளதமின் தந்தை பாலமுருகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...