தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கோயில் குளத்தில் அனுமதியின்றி மண் அள்ளிய இருவா் கைது

கோயில் குளத்தில் அனுமதியின்றி மண் அள்ளிய இருவா் கைது

News image
கைது- சித்திரிப்பு
Updated On :6 மார்ச் 2026, 6:34 pm

Syndication

செய்யாறு அருகே கோயில் குளத்தில் அனுமதியின்றி மண் அள்ளியதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

செய்யாறு வட்டம், சிறுவேளியநல்லூா் கிராமத்தில் உள்ள மயிலாத்தமன் கோயிலுக்குச் சொந்தமான குளத்துப் பகுதியில் இருந்து அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளப்படுவதாக செய்யாறு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தாகத் தெரிகிறது.

இதையடுத்து, உதவி ஆய்வாளா் வரதராஜ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றனா். அப்போது, அங்கு பொக்லைன் இயந்திரம் மூலம் அனுமதியின்றி மண் அள்ளிக்கொண்டு இருந்தது தெரியவந்ததையடுத்து, அந்த இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், இதுதொடா்பாக செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, பல்லி கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் (36), பெரும்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த சந்தோஷ் (24) ஆகியோரை கைது செய்தனா்.