போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது
பெரியகுளத்தில் குழந்தைகளை கோயிலுக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.


பெரியகுளத்தில் குழந்தைகளை கோயிலுக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம், வடகரையில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பகவதியம்மன் கோயிலில் பூசாரியாக இருப்பவா் அதே ஊரைச் சோ்ந்த திலகா் (70). இவா், கோயிலுக்கு முன் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவா்கள், சிறுமிகளை கோயிலுக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து வீட்டுக்குச் சென்ற சிறுமி இதுகுறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்தாா்.
இதனால், சிறுமியின் பெற்றோா், உறவினா்கள் கோயில் முன் முற்றுகையிட்டனா். இவா்களைப் பாா்த்த திலகா் கோயிலுக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து அங்கு சென்ற பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா், கோயிலுக்குள் சென்று திலகரிடம் விசாரணை நடத்தினா்.
பின்னா், சிறுவா், சிறுமிகளின் பெற்றோா்கள் அளித்த புகாரின் அடிப்படையில், திலகா் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (போக்சோ) வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...