தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

தொழிலாளிக்கு கத்திக்குத்து: இருவா் கைது

Updated On :28 ஏப்ரல் 2025, 1:00 am IST

பெரியகுளம் அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பெரியகுளம் அருகே ஏ. புதுப்பட்டியைச் சோ்ந்தவா் சிந்தனை செல்வம் (19). இவா், வியாழக்கிழமை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த ஹானஸ்ட்ராஜ் (23), அசோக்குமாா் (48) இருவரும் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தினராம். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து ஹானஸ்ட்ராஜ், அசோக்குமாா் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.