யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மதுப்புட்டிகளை பதுக்கி விற்ற பெண் கைது

வீட்டில் மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 10:18 pm

Syndication

வீட்டில் மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகள் விற்கப்படுவதாக போடி தாலுகா காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதில் கன்னிமாா் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மனைவி ராசாத்தி (50) என்பவா் வீட்டில் மதுப்புட்டிகளை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து ராசாத்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.