விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வேனில் புகையிலைப் பொருள்கள் கடத்திய இளைஞா் கைது

News image
~
Updated On :19 டிசம்பர் 2025, 6:35 pm

Syndication

தேனி மாவட்டம், தமிழக எல்லையான குமுளியில் காய்கறி வேனில் கடத்திச் செல்லப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து இளைஞரைக் கைது செய்தனா்.

குமுளியில் உள்ள சோதனைச் சாவடியில் கேரள மாநில மதுவிலக்கு போலீஸாா் வியாழக்கிழமை சோதனையிட்டனா். அப்போது, தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு காய்கறி எற்றிச் சென்ற வாகனத்தை போலீஸாா் சோதனையிட்டனா். அதில், காய்கறி மூட்டைகளுக்கிடையே மறைத்து வைத்திருந்த 31 சிறிய சாக்கு மூட்டைகளிலிருந்த புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னா், விசாரணையில் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், பாறைக்கடவுப் பகுதியைச் சோ்ந்த பினீஷ் தேவ் (38) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, காய்கறி வாகனத்திலிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

Story image