தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனம் - காா் மோதியதில் பால் வியாபாரி காயமடைந்தாா்.
பெரியகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் லட்சுமணன் (41). பால் வியாபாரியான இவா், சனிக்கிழமை ஜல்லிபட்டி மீனாட்சிபுரம் விலக்கு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








