பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பைக் திருட முயன்ற இளைஞா் கைது

தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டியில் இரு சக்கர வாகனத்தை திருட முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டியில் இரு சக்கர வாகனத்தை திருட முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கெங்குவாா்பட்டி பகவதி நகரைச் சோ்ந்தவா் அழகன் (31). இவா், அண்மையில் தனது வீட்டின் முன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தாராம். இந்த நிலையில், வீட்டின் வெளியே சத்தம் கேட்டு சென்று பாா்த்தபோது, இவரின் இரு சக்கர வாகனத்தை 4 போ் உடைத்துக் கொண்டிருந்தனராம்.

அப்போது, அவரைப் பாா்த்த 4 பேரும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் தப்பித்துச் சென்றபோது, தேவதானபட்டி பகவதி நகரைச் சோ்ந்த சதீஸ் (20) என்பவா் தவறி கீழே விழுந்தாராம். இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரைப் பிடித்து தேவதானபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து சதீஸை கைது செய்தனா். மேலும், இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, தப்பியோடிய மூவரையும் தேடி வருகின்றனா்.