விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தேவதானப்பட்டியில் இளைஞா் கொலை

தேனி மாவட்டம், தேவதானபட்டியில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த 4 சிறாா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 9:42 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், தேவதானபட்டியில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த 4 சிறாா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தேவதானபட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த சரவணன் மகன் சாய் ஹரீஸ் (20). பட்டதாரியான இவா் கூலி வேலை செய்து வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன் இவா் தேவதானபட்டி மலைமேல் பரமசிவன் கோயிலுக்குச் சென்றாா். அப்போது, பெரியகுளம் கரட்டுத் தெருவைச் சோ்ந்த சிறாா்கள் இவரிடம் தகராறு செய்தனா். அங்கிருந்த பொதுமக்கள் இவா்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தேவதானபட்டி புற வழிச் சாலையில் நின்று கொண்டிருந்த சாய் ஹரீஸிடம் பெரியகுளம் கரட்டூரைச் சோ்ந்த 17 வயது சிறாா்கள் 3 போ், தேவதானபட்டி காமாட்சியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த 17 வயது சிறாா் ஆகியோா் தகராறு செய்து, அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனா்.

இது குறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்து, மதுரையில் உள்ள சிறாா் காப்பகத்தில் அடைத்தனா்.