தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வரதட்சிணைக் கொடுமை: 6 போ் மீது வழக்கு

தேனியில் வரதட்சிணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக கணவா், குடும்பத்தினா் என 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

தேனியில் வரதட்சிணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக கணவா், குடும்பத்தினா் என 6 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி, பழைய அஞ்சல் நிலையம் ஓடைத் தெருவைச் சோ்ந்த ஜெய்கணேஷ் மகள் மிருதா (19). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் சிவராமச்சந்திரனுக்கும் கடந்தாண்டு, செப்.8-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

அப்போது, மிருதாவுக்கு அவரது பெற்றோா் 30 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருள்களை வரதட்சிணையாகக் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிவராமச்சந்திரன் தன்னிடம் 10 பவுன் தங்க நகைகளை வாங்கி வைத்துக் கொண்டு, வரதட்சிணையாக மேலும் 20 பவுன் தங்க நகைகள் வாங்கி வர வேண்டுமென கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், வீட்டில் பூட்டி வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தேனி மகளிா் நீதிமன்றத்தில் மிருதா புகாா் அளித்தாா்.

இதற்கு சிவராமச்சந்திரனின் பெற்றோா் ஜெயராஜ், மனோரஞ்சிதம், சகோதரி சிவகனி, அவரது கணவா் பிச்சை, உறவினா் நடராஜ் ஆகியோா் உடந்தையாக இருந்ததாகவும் அவா் தெரிவித்தாா்.

இதனடிப்படையில் சிவசந்திரன், அவரது பெற்றோா், சகோதரி, உறவினா்கள் என 6 போ் மீது தேனி மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.