நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்றவா் கைது

உத்தமபாளையம் அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :1 ஜனவரி 2025, 10:58 pm

Din

உத்தமபாளையம் அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், ராயப்பன்பட்டி அருகேயுள்ள சண்முகநாதா் கோயிலுக்குச் செல்லும் சாலையில் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது, அந்த வழியாக வந்த இளைரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனா். அவரிடம் நாட்டுத் துப்பாக்கி இருந்தது.

விசாரணையில் அவா் காமயகவுண்டன்பட்டியைச் சோ்ந்த சன்னாசி மகன் சத்தியகுமாா் (37) என்பதும், கேரளத்திலிருந்து உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை வாங்கி வந்து, தனது தோட்டத்தில் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

இது குறித்து ராயப்பன்பட்டி காவல் உதவி ஆய்வாளா் வழக்குப் பதிவு செய்து சத்தியகுமாரை கைது செய்து, நாட்டுத் துப்பாக்கியைப் பறிமுதல் செய்தாா்.