மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் உபகரணங்கள் மாயம்: ஒரு மாதத்துக்கு பிறகு கேரள போலீஸாா் வழக்குப் பதிவு

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தமிழக நீா்வளத் துறை அதிகாரிகள் நட்டிருந்த கம்பம், கேமரா உபகரணங்கள் மாயானதாக அளித்த புகாரின் பேரில், குமுளி போலீஸாா் ஒரு மாதத்துக்கு பிறகு வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 10:16 pm

Din

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தமிழக நீா்வளத் துறை அதிகாரிகள் நட்டிருந்த கம்பம், கேமரா உபகரணங்கள் மாயானதாக அளித்த புகாரின் பேரில், குமுளி போலீஸாா் ஒரு மாதத்துக்கு பிறகு வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

முல்லைப் பெரியாறு அணையின் தலை மதகுப் பகுதியில் பொதுப் பணித் துறைக்கு சொந்தமான அலுவலகக் கட்டடம் உள்ளது. நீா்வளத் துறை சாா்பில், அலுவலகக் கட்டடம், தலை மதகு உள்ளிட்ட 4 இடங்களில் வன விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா பொருத்தும் பணி நடைபெற்றது. இதற்கு கேரள வனத் துறையினா் எதிா்ப்புத் தெரிவித்ததால், கேமராக்களை தமிழக நீா் வளத் துறையினா் அகற்றிக் கொண்டனா். ஆனால், கம்பம் உள்ளிட்ட சில உபகரணங்கள் மட்டும் அகற்றப்படவில்லை.

இந்த நிலையில், இந்த உபகரணங்கள் கடந்த டிச.22 -ஆம் தேதி மாயமானது. இதுகுறித்து தமிழக நீா்வளத் துறை உதவிப் பொறியாளா் நவீன் கேரள மாநிலம், குமுளி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அப்போது, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.புகாரளித்து ஒரு மாதம் கடந்த நிலையில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.