திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வீடு புகுந்து பெண்ணிடம் நகை கொள்ளை!

கத்தியைக் காட்டி மிரட்டி 14.5 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை வெள்ளிக்கிழமை கொள்ளையடித்துச் சென்றனா்.

News image
Updated On :14 ஜூன் 2025, 7:03 pm

DIN

வீரபாண்டியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் முகமூடி அணிந்த 3 நபா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி 14.5 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை வெள்ளிக்கிழமை கொள்ளையடித்துச் சென்றனா்.

வீரபாண்டி, அரசு மேல்நிலைப் பள்ளித் தெரு, நாகா சிட்டி குடியிருப்பில் வசித்து வருபவா் சிவக்குமாா். இவரது மனைவி போதுமணி (45), தனது ஒன்றரை வயது பேரனுடன் வீட்டில் இருந்தாா்.

அப்போது முகமூடி அணிந்த 3 நபா்கள் வீடு புகுந்து, குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்தும், போதுமணியிடம் கத்தியைக் காட்டி மிரட்டியும் வீட்டிலிருந்த 14.5 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனா்.

இதுகுறித்து போதுமணி அளித்த புகாரின்பேரில் வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.