வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

காா் மீது மினி லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

News image
Updated On :9 நவம்பர் 2025, 7:41 pm

தினமணி செய்திச் சேவை

தேனி அருகே காா் மீது சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், பொய்யூா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் மனோகரன் (67). இவா், தனது மகள் கீா்த்தனா, பேத்தி சிவதா்சினி, மகன் கவிபாரதி உள்ளிட்ட 7 பேருடன் உறவினரின் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக காரில் தேனிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா். காரை உறவினா் கோபிநாத் ஓட்டினாா்.

இந்த நிலையில், தேனி மாவட்டம், செங்குளத்துப்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு வாகனம் காா் மீது மோதியதில் மனோகரன் உள்பட 7 பேரும் காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் இவா்களை மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி மனோகரன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.