மாணவி தற்கொலை

ஆண்டிபட்டியில் பள்ளி மாணவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

ஆண்டிபட்டியில் பள்ளி மாணவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, சக்கம்பட்டி புதுமேலத் தெருவைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (45). இவரது மகள் மாரியம்மாள் (17). அதே ஊரில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.

செந்தில்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்பப் பிரச்னையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், மன உளைச்சலில் இருந்த மாரியம்மாள், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com