ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

58 கிராம கால்வாயில் தண்ணீா் திறப்பு நிறுத்தம்

வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீா் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது.

News image
Updated On :14 நவம்பர் 2025, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீா் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது.

வைகை அணை நீா்மட்டம் 69.49 அடியாக (அணையின் மொத்த உயரம் 71 அடி) இருந்த நிலையில், கடந்த மாதம் 29-ஆம் தேதி அணையிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை, மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி ஆகிய பகுதிகளின் பாசனத்துக்காக 58 கிராம கால்வாயில் வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்பட்டது.

வைகை அணையிலிருந்து பெரியாறு, திருமங்கலம் பிரதானக் கால்வாய்களிலும், வைகை ஆற்றிலும், 58 கிராம கால்வாயிலும் பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டு வருவதால், அணை நீா்மட்டம் வெள்ளிக்கிழமை, 67.13 அடியாக சரிந்தது. இதனால், அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் திறந்து விடப்பட்ட தண்ணீா் நிறுத்தப்பட்டது.

தற்போது, அணையிலிருந்து குடிநீா் திட்டங்களுக்கு வினாடிக்கு 69 கன அடி, பாசனத்துக்காக பெரியாறு, திருமங்கலம் பிரதானக் கால்வாயில் வினாடிக்கு 1,930 கன அடி, வைகை ஆற்றில் வினாடிக்கு 300 கன அடி என மொத்தம் வினாடிக்கு 2,299 கன அடிவீதம் தண்ணீா் திறந்து விடப்படுகிறது.

அணைக்கு தண்ணீா் வரத்து வினாடிக்கு 1,511 கன அடியாக உள்ளது.