நகராட்சிப் பணியாளருக்கு கத்திக்குத்து: இளைஞா் கைது

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் நகராட்சிப் பணியாளரை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Published on

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் நகராட்சிப் பணியாளரை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளத்தில் உள்ள தென்கரை நான்கு முனை சந்திப்பில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் நகராட்சி தற்காலிகப் பணியாளா் தினேஷ் (32) ஈடுபட்டு வந்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை தினேஷ் அங்கு வேலைபாா்த்து கொண்டிருந்தாா். அப்போது, பட்டாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த காமராஜ் (27) அங்கு வந்து, என்னிடம் கேட்காமல் எப்படி சாலைப் பணிகளை செய்கிறாய் என்று கூறி, தினேஷை கத்தியால் குத்தினாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து காமராஜை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com