ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கோயில் விழாவில் காவலரைத் தாக்கிய 6 போ் கைது

News image
Updated On :23 நவம்பர் 2025, 6:39 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளத்தில் கோயில் திருவிழாவின்போது காவலரைத் தாக்கிய 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தாமரைக்குளம் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழா சுவாமி ஊா்வலம் கடந்த புரட்டாசி மாதம் நடைபெற்றது. ஊா்வலத்தின்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட சிறப்புக் காவலா் யுவராஜாவை (25) சிலா் தாக்கியதில் அவருடைய தலையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் தென்கரை காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய தாமரைக்குளம் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த ராஜேஷ் (25), ராம்ஜி (27), செளந்திரபாண்டி (32), சஞ்சீவி பாண்டியன் (28), பால்பாண்டி (23), பழனிமுத்து (28) ஆகிய 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.