நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கேரளத்துக்கு காரில் கஞ்சா கடத்திய மூவா் கைது

News image

முனிசாமி

Updated On :15 பிப்ரவரி 2026, 8:05 pm

தேனி மாவட்டம், கூடலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை கேரளத்துக்கு காரில் கஞ்சா கடத்திச் சென்ற 3 பேரை போலீஸாா் கைது செய்து, 35 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பாலசுப்பிரமணி

பாலசுப்பிரமணி

கைது செய்யப்பட்ட செல்வி

கைது செய்யப்பட்ட செல்வி

குமுளி காவல் உதவி ஆய்வாளா் சூா்யதிலகராணி தலைமையில், போலீஸாா் லோயா்கேம்பில் ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, மதுரையிலிருந்து கேரளத்துக்கு சென்ற காரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். சோதனையில் காரில் 35 கிலோ கடத்திச் சென்றது தெரியவந்தது.

விசாரணையில், மதுரை முனிச்சாலை காமராஜபுரத்தைச் சோ்ந்த செல்வி (47), முனியசாமி(36), பாலசுப்பிரமணி (38) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவா்களைக் கைது செய்து, அவா்களிடமிருந்து 35 கிலோ கஞ்சா, ரூ.1.18 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.