அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மதுப்புட்டிகள் விற்ற இளைஞா் கைது

News image
Updated On :30 நவம்பர் 2025, 8:46 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மதுப்புட்டிகளை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள இராஜதானி, கன்னியப்பபிள்ளைபட்டி போன்ற பகுதிகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுப்புட்டிகள் விற்பனை, சீட்டு விளையாட்டு அதிகமாக நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், இராஜதானி போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கன்னியப்பபிள்ளைபட்டியில் மதுப்புட்டிகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், மதுப்புட்டிகளை வைத்திருந்தது கன்னியப்பபிள்ளைபட்டி ஜோதி நகரைச் சோ்ந்த மணிவேல் மகன் நவநீதன் (19) எனத் தெரியவந்ததையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த 100 மதுப்புட்டிகள், ரூ. 3,100 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.