புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

லேயா்கேம்பில் முளைப்பாரி ஊா்வலம்

தேனி மாவட்டம், கூடலூா் அருகே லோயா்கேம்பில் அமைந்துள்ள பகவதியம்மன் கோயில் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

லோயா்கேம்பில் ஸ்ரீபகவதியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற முளைப்பாரி ஊா்வலத்தில் பங்கேற்ற பெண்கள்.

Updated On :3 ஏப்ரல் 2026, 8:52 pm

தேனி மாவட்டம், கூடலூா் அருகே லோயா்கேம்பில் அமைந்துள்ள பகவதியம்மன் கோயில் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த கோயில் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. விழாவில் அா்த்த ஜாம பூஜை, மா விளக்கு பூஜையுடன் புதன்கிழமை கோயிலில் பொதுப்பொங்கல், ஊா் பொதுப்பொங்கல், அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடந்து அம்மன் நகா்வலம் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலையில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரியை ஊா்வலமாக எடுத்துச் சென்று முல்லைப் பெரியாற்றில் கரைத்தனா்.