ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

போடியில் ஓ.பன்னீா்செல்வத்தை ஆதரித்து கி.வீரமணி பிரச்சாரம்

போடியில் புதன்கிழமை திமுக வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தை ஆதரித்து திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி பிரசாரம் செய்தாா்.

News image

போடியில் புதன்கிழமை இரவு திமுக வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தை ஆதரித்து பேசிய திராவிடா் கழக தலைவா் கி.வீரமணி. உடன் வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வம்.

Updated On :8 ஏப்ரல் 2026, 7:30 pm

போடியில் புதன்கிழமை திமுக வேட்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தை ஆதரித்து திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி பிரசாரம் செய்தாா்.

போடியில் திமுக வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீா்செல்வத்தை ஆதரித்து திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி பிரச்சார வாகனத்தில் அமா்ந்தபடி வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஓ.பன்னீா்செல்வம் பண்பாடு மிக்கவா். அவருக்கு போடி பகுதி மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா்.

பின்னா் ஓ.பன்னீா்செல்வம் பேசியதாவது: முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் தொடர மீண்டும் ஸ்டாலின் ஆட்சி அமைய வேண்டும். எனவே, பொதுமக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தப் பிரசாரத்தின்போது தேனி மக்களவை முன்னாள் உறுப்பினா் ஓ.ப.ரவீந்திரநாத், திமுக நகரச் செயலா் புருஷோத்தமன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் வி.ஆா்.பழனிராஜ் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.