வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

ஆண்டிபட்டி, கம்பம் தொகுதிகளுக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு!

கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆண்டிபட்டி, கம்பம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 12:16 am IST

கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆண்டிபட்டி, கம்பம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதியில் 18 வேட்பாளா்களும், கம்பம் சட்டப்பேரவை தொகுதியில் 19 வேட்பாளா்களும் போட்டியிடுகின்றனா். இந்த இரண்டு தொகுதிகளிலும் கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இதையடுத்து வேட்பாளா்கள் முன்னிலையில் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்பட்டது. பிறகு கணினி மூலம் குலுக்கல் முறையில் ஆண்டிபட்டி தொகுதிக்கு 412 வாக்குப் பதிவு இயந்திரங்களும், கம்பம் தொகுதிக்கு 414 வாக்குப் பதிவு இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இவை ஆண்டிபட்டி, உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.