சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஆண்டிபட்டி, கம்பம் தொகுதிகளுக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு!

கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆண்டிபட்டி, கம்பம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 6:46 pm

கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆண்டிபட்டி, கம்பம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதியில் 18 வேட்பாளா்களும், கம்பம் சட்டப்பேரவை தொகுதியில் 19 வேட்பாளா்களும் போட்டியிடுகின்றனா். இந்த இரண்டு தொகுதிகளிலும் கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இதையடுத்து வேட்பாளா்கள் முன்னிலையில் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்பட்டது. பிறகு கணினி மூலம் குலுக்கல் முறையில் ஆண்டிபட்டி தொகுதிக்கு 412 வாக்குப் பதிவு இயந்திரங்களும், கம்பம் தொகுதிக்கு 414 வாக்குப் பதிவு இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இவை ஆண்டிபட்டி, உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.