‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

ஆண்டிபட்டி, கம்பம் தொகுதிகளுக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு!

கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆண்டிபட்டி, கம்பம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 12:16 am IST

கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆண்டிபட்டி, கம்பம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதியில் 18 வேட்பாளா்களும், கம்பம் சட்டப்பேரவை தொகுதியில் 19 வேட்பாளா்களும் போட்டியிடுகின்றனா். இந்த இரண்டு தொகுதிகளிலும் கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இதையடுத்து வேட்பாளா்கள் முன்னிலையில் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்பட்டது. பிறகு கணினி மூலம் குலுக்கல் முறையில் ஆண்டிபட்டி தொகுதிக்கு 412 வாக்குப் பதிவு இயந்திரங்களும், கம்பம் தொகுதிக்கு 414 வாக்குப் பதிவு இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இவை ஆண்டிபட்டி, உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.