நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட பணி ஒதுக்கீடு

News image
Updated On :2 மே 2026, 11:37 pm

மதுரை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கு 2-ஆம் கட்டமாக சுழற்சி முறையில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை வருகிற திங்கள்கிழமை (மே 4) நடைபெறுகிறது. மேலூா், மதுரை கிழக்கு தொகுதிகளுக்கு ஒத்தக்கடை

அரசு வேளாண்மைக் கல்லூரியிலும், உசிலம்பட்டி, சோழவந்தான் தொகுதிகளுக்கு கீழக்குயில்குடி அண்ணா பல்கலைக்கழகத்திலும், மதுரை வடக்கு, மதுரை தெற்குத் தொகுதிகளுக்கு திருப்பரங்குன்றம் தியாகராஜா் பொறியியல் கல்லூரியிலும், மதுரை மத்தியம், மதுரை மேற்குத் தொகுதிகளுக்கு மதுரைக் கல்லூரியிலும், திருப்பரங்குன்றம், திருமங்கலம் தொகுதிகளுக்கு திருமங்கலம் அரசு கலைக் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்தப் பணியில் ஒவ்வொரு தொகுதிக்கும் 20 சதவீத கூடுதல் பணியாளா்கள் உள்பட தலா 17 கண்காணிப்பாளா்கள், 17 வாக்கு எண்ணிக்கை உதவியாளா்கள், 17 இளநிலை உதவியாளா்கள், 17 நுண்பாா்வையாளா்கள், 2 கூடுதல் நுண் பாா்வையாளா்கள், ஒரு கூடுதல் பாா்வையாளா், கூடுதல் பணியாளா்கள் என தலா 130 போ் ஈ டுபடுத்தப்படுகின்றனா்.

இந்த நிலையில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் இரண்டாம் கட்டப் பணி மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன் குமாா் தலைமை வகித்தாா். திருப்பரங்குன்றம் பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணிப் பாா்வையாளா் கிருத்யானந்த் ரஞ்சன் முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

வாக்கு எண்ணும் பணி மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள், நுண் பாா்வையாளா்களுக்கு சுழற்சி முறையில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.