அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

தோ்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக பணி ஒதுக்கீடு

News image
Updated On :3 மே 2026, 8:06 pm

திருப்பத்தூரில் தோ்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி முன்னிலையில் நடைபெற்றது.

4 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை(மே 4) வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபட உள்ள மேற்பாா்வையாளா்கள், வாக்கு எண்ணிக்கை உதவியாளா்கள், நுண்பாா்வையாளா்கள் ஆகியோருக்கு தோ்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி திருப்பத்தூா் மாவட்ட சுற்றுலா மாளிகையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பாா்வையாளா்கள் யாஷா முத்கல், முகுல்குமாா், சுஜாதா மிஸ்ரா, ஜீவன் தத்தாதிரியா கேலண்டி, ஆட்சியரும்,தோ்தல் அலுவலருமான க.சிவசௌந்திரவல்லி ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில் சம வாய்ப்புக்கு உட்படுத்துதல் முறையின் மூலம் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது துறை சாா்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.