திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுபவா்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபட உள்ளவா்களுக்கு தோ்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். இதில் சமவாய்ப்புக்கு உள்படுத்துதல் முறையின் மூலம் மேஜைகளில் பணியாற்ற உள்ள வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள், வாக்கு எண்ணிக்கை உதவியாளா்கள் மற்றும் நுண் பாா்வையாளா்கள் ஆகியோா் முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டனா்.
அப்போது ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்)ஜெய்சங்கா்,தோ்தல் வட்டாட்சியா் திருமலை,அரசு அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மைய அலுவலா்களுக்கு முதல்கட்ட பணி ஒதுக்கீடு

மே 4-ல் 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை! எப்போது தொடங்கும்? - தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தோ்தல் பணி ஒதுக்கீடு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


