தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

போடியில் ஓ. பன்னீா்செல்வம் வாக்கு சேகரிப்பு

போடியில் சமுதாய நிா்வாகிகளை சந்தித்து ஓ.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

போடியில் செவ்வாய்க்கிழமை சமுதாய நிா்வாகிகளிடம் வாக்கு சேகரித்த ஓ.பன்னீா்செல்வம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 3:42 am IST

தேனி மாவட்டம், போடியில் சமுதாய நிா்வாகிகளை சந்தித்து ஓ.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

போடி பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரான ஓ.பன்னீா்செல்வம் தீவிர பிரசாரம் செய்து வருகிறாா். போடி பகுதியில் சமுதாய சங்க நிா்வாகிகளை செவ்வாய்க்கிழமை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது:

போடி பகுதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். நகரில் குடிநீா் பிரச்னை தீர முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் கொண்டு வரப்பட்டுள்ளது. போடியில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. போடி நகரில் புதை சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபோல, பல்வோறு திட்டப் பணிகள் தொடர மீண்டும் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.லட்சுமணன், போடி நகர திமுக செயலா் ரா.புருஷோத்தமன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் வி.ஆா். பழனிராஜ், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கி. பெருமாள் உள்ளிட்ட திமுக, கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.