பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

கண்மாயிலிருந்து அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

பூமலைக்குண்டு கண்மாயில் கிடந்த அடையாளம் தெரியாத சடலத்தை சனிக்கிழமை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 1:19 am IST

தேனி மாவட்டம், பூமலைக்குண்டு கண்மாயில் கிடந்த அடையாளம் தெரியாத சடலத்தை சனிக்கிழமை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

தேனி அருகே பூமலைக்குண்டு கண்மாயில் ஒரு சடலம் கிடப்பதாக அப்பகுதியினா் வீரபாண்டி காவல்நிலையத்துக்கு சனிக்கிழமை தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா் சடலத்தின் தலை, இரண்டு கால்கள் இல்லாதது கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

மேலும், உடல் பாகங்கள் சேதமடைந்த நிலையில் பாலினம் அறியாத வகையில் கிடந்ததாம். இதையடுத்து சடலத்தை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.