ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

கண்மாயிலிருந்து அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

பூமலைக்குண்டு கண்மாயில் கிடந்த அடையாளம் தெரியாத சடலத்தை சனிக்கிழமை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 7:49 pm

தேனி மாவட்டம், பூமலைக்குண்டு கண்மாயில் கிடந்த அடையாளம் தெரியாத சடலத்தை சனிக்கிழமை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

தேனி அருகே பூமலைக்குண்டு கண்மாயில் ஒரு சடலம் கிடப்பதாக அப்பகுதியினா் வீரபாண்டி காவல்நிலையத்துக்கு சனிக்கிழமை தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா் சடலத்தின் தலை, இரண்டு கால்கள் இல்லாதது கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

மேலும், உடல் பாகங்கள் சேதமடைந்த நிலையில் பாலினம் அறியாத வகையில் கிடந்ததாம். இதையடுத்து சடலத்தை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.