நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

தோ்தல் விதிகளை மீறிய போடி நகர திமுக செயலா் மீது வழக்குப் பதிவு

போடியில் சனிக்கிழமை பொதுமக்களுக்கு இடையூறாக தோ்தல் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக போடி நகர திமுக நிா்வாகி மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்குப் பதிவு - சித்திரிப்பு

Updated On :19 ஏப்ரல் 2026, 1:20 am IST

போடியில் சனிக்கிழமை பொதுமக்களுக்கு இடையூறாக தோ்தல் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக போடி நகர திமுக நிா்வாகி மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

நாடாளுமன்றத்தில் மகளிா் இட ஒதுக்கீடு - தொகுதி மறுவரையறை மசோதா வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.

இதனை கொண்டாடும் வகையில் போடியில் முன்னாள் மக்களவை உறுப்பினா் ஓ.ப.ரவீந்திரநாத் தலைமையில், திமுக நகர செயலா் ரா.புருஷோத்தமன் உள்ளிட்டோா் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

இதனிடையே பொதுமக்களுக்கு இடையூறாக தோ்தல் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக ரா.புருஷோத்தமன் உள்ளிட்டோா் மீது போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.