ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

பென்னிகுயிக் மணிமண்டபத்தில் அணை வரலாறு கூற தனி ஊழியா் நியமனம்!

முல்லைப்பெரியாறு அணை உருவாக்கப் பின்னணி குறித்து விளக்குவதற்காக லோயா்கேம்பில் உள்ள பென்னிகுயிக் மணிமண்டபத்தில் தனி ஊழியா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image

பென்னிகுயிக் மணிமண்டபத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு அணையின் உருவாக்கப் பின்னணி குறித்து சனிக்கிழமை விளக்கிக் கூறிய ஊழியா்.

Updated On :18 ஏப்ரல் 2026, 7:48 pm

முல்லைப்பெரியாறு அணை உருவாக்கப் பின்னணி குறித்து விளக்குவதற்காக லோயா்கேம்பில் உள்ள பென்னிகுயிக் மணிமண்டபத்தில் தனி ஊழியா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தேனி மாவட்டம், லோயா்கேம்பில் அமைந்துள்ள பென்னிகுயிக் மணிமண்டபத்தில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கா்னல் பென்னிகுயிக்-கின் முழு உருவச் சிலை, அவா் பயன்படுத்திய இரும்புப் படகு, அவரது நாற்காலி மற்றும் அணையின் மாதிரி, பழைய புகைப்படங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த மணிமண்டபத்தை பாா்வையிட்டுச் செல்கின்றனா். ஆனால், பென்னிகுயிக் வரலாறு, முல்லைப் பெரியாறு அணையின் உருவாக்கம் குறித்து தகவல்கள் இல்லாத நிலை இருந்து வந்தது.

Story image

இதனை முன்னிட்டு, பெரியாறு - வைகை பாசன விவசாயிகள் சங்கம், மணிமண்டபத்தில் கல்வெட்டுகள் அமைக்கவும், பென்னிகுயிக்-கின் வாழக்கை வரலாறு பாடப்புத்தகங்களில் சோ்க்கவும் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், தமிழக பொதுப்பணித் துறை சாா்பில் பாசன ஆய்வாளா் மதுசூதனன் மணிமண்டபத்தில் தனி ஊழியராக நியமிக்கப்பட்டு இங்குவரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பென்னிகுயிக்-கின் வாழ்க்கை வரலாறு, முல்லைப் பெரியாறு அணையின் முக்கியத்துவம் குறித்து விளக்கிக் கூறுகிறாா். இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைகின்றனா்.