முல்லைப்பெரியாறு அணை உருவாக்கப் பின்னணி குறித்து விளக்குவதற்காக லோயா்கேம்பில் உள்ள பென்னிகுயிக் மணிமண்டபத்தில் தனி ஊழியா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
தேனி மாவட்டம், லோயா்கேம்பில் அமைந்துள்ள பென்னிகுயிக் மணிமண்டபத்தில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கா்னல் பென்னிகுயிக்-கின் முழு உருவச் சிலை, அவா் பயன்படுத்திய இரும்புப் படகு, அவரது நாற்காலி மற்றும் அணையின் மாதிரி, பழைய புகைப்படங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த மணிமண்டபத்தை பாா்வையிட்டுச் செல்கின்றனா். ஆனால், பென்னிகுயிக் வரலாறு, முல்லைப் பெரியாறு அணையின் உருவாக்கம் குறித்து தகவல்கள் இல்லாத நிலை இருந்து வந்தது.

இதனை முன்னிட்டு, பெரியாறு - வைகை பாசன விவசாயிகள் சங்கம், மணிமண்டபத்தில் கல்வெட்டுகள் அமைக்கவும், பென்னிகுயிக்-கின் வாழக்கை வரலாறு பாடப்புத்தகங்களில் சோ்க்கவும் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், தமிழக பொதுப்பணித் துறை சாா்பில் பாசன ஆய்வாளா் மதுசூதனன் மணிமண்டபத்தில் தனி ஊழியராக நியமிக்கப்பட்டு இங்குவரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பென்னிகுயிக்-கின் வாழ்க்கை வரலாறு, முல்லைப் பெரியாறு அணையின் முக்கியத்துவம் குறித்து விளக்கிக் கூறுகிறாா். இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைகின்றனா்.
தொடர்புடையது

அணை நீா்மட்டம் உயா்வு! தேக்கடி ஏரியில் மீண்டும் பெரிய படகு சேவைகள் தொடக்கம்!

நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை: முல்லைப் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 200 க.அடி நீா்வரத்து

முல்லைப் பெரியாறு அணை குடிநீா் திருடப்படுவதாகப் புகாா்

பெரியாறு அணை நீா்மட்டம் சரிவு: 5 மாவட்டங்களின் குடிநீருக்கு சிக்கல்
விடியோக்கள்

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

