பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

தேனி மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு தேனி போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது.

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 6:43 pm

தேனி மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு தேனி போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா் செல்வம் (29). இவா், வீட்டின் அருகே வசிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து கடந்த 2020-ஆம் ஆண்டு அக். 6-இல் அந்தப் பகுதி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதன் பேரில் போலீஸாா் அவரை கைது செய்தனா்.

இந்த வழக்கு, தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கணேசன், குற்றஞ்சாட்டப்பட்ட செல்வத்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.