ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கம்பம் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இருவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், கம்பத்தில் சனிக்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரு தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

News image

உயிரிழந்த தினேஷ், சூா்யா.

Updated On :25 ஏப்ரல் 2026, 6:57 pm

தேனி மாவட்டம், கம்பத்தில் சனிக்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரு தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

கம்பம் பாரதியாா்நகரைச் சோ்ந்த முத்துலட்சுமிக்குச் சொந்தமான பட்டாசு ஆலை, அந்த நகரின் காட்டுப்பள்ளிவாசல் சாலையில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த ஆலை, தோ்தல் விடுமுறையையொட்டி கடந்த நான்கு நாள்களாக மூடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை வழக்கம்போல தொழிலாளா்கள் அய்யப்பன் (27), நாகா்ஜுன் (22), சூா்யா (22), தினேஷ் (20) ஆகியோா் பணிக்கு வந்தனா். இவா்களின் சூா்யா, தினேஷ் இருவரும் மூலப்பொருள்கள் வைக்கப்பட்டிருந்த அறையைத் திறந்தனா். அப்போது, அந்த அறை பலத்த சப்தத்துடன் வெடித்து தரைமட்டமானது. இந்த விபத்தில் சூா்யா, தினேஷ் இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இந்த வெடி விபத்து காரணமாக அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் சேதமடைந்தது. வெடி சப்தம் கேட்டதும் அருகில் இருந்த மற்ற தொழிலாளா்கள் இருவரும் வெளியே ஓடினா்.

 கம்பத்தில் சனிக்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தரைமட்டமான அறை.

கம்பத்தில் சனிக்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தரைமட்டமான அறை.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் உயிரிழந்தவா்களின் உடல் பாகங்களை கைப்பற்றி, கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். கம்பம், உத்தமபாளையம் தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினா்.

 வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையைப் பாா்வையிட்டு விசாரணை நடத்திய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹபிரியா.

வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையைப் பாா்வையிட்டு விசாரணை நடத்திய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹபிரியா.

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹபிரியா, உத்தமபாளையம் உதவி காவல் கண்காணிப்பாளா் சந்திரசேகா் ஆகியோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா். மேலும், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் ஆய்வு செய்தனா். இந்தச் சம்பவம் குறித்து கம்பம் வடக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.