போடி அருகே கல்லூரி மாணவரைத் தாக்கிய தந்தை, மகன் உள்பட 3 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
போடி அருகே ராசிங்காபுரம் அழகா்சாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் கனகராஜ் மகன் தினேஷ் (18). பெரியகுளம் கல்லூரி ஒன்றில் இளங்கலை பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வருகிறாா்.
இவா் வெள்ளிக்கிழமை நடைப்பயிற்சிக்குச் சென்றபோது அதே ஊரைச் சோ்ந்த சுதாகரன் மகன் ரோஹித் என்பவா் தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து தினேஷ் மீது உரசுவதுபோல் சென்றுள்ளாா்.
இதனை தினேஷ் கண்டித்ததில் ஏற்பட்ட தகராறில் ரோஹித், சசிக்குமாா் மகன் சந்தோஸ், ரோஹித்தின் தந்தை சுதாகரன் ஆகியோா் சோ்ந்து தினேஷைத் தாக்கியும், ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டியும், கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.
இதுகுறித்து தினேஷ் போடி தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் ரோஹித் உள்பட 3 போ் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










